Monday, September 24, 2012


மனிதன் ?????????
( மனிதம் உள்ளவன் )

மனிதனின் 
பேராசைதான்
மரணத்தின்
வாசல்...

தேவை - அதிகரிக்க
அதிகரிக்க
மரணமும்
அதிகரிக்கும்...

இயற்கையை
அழித்தாய்!
மரணத்தை
விதைத்தாய்!
கேட்டால்
நாகரிகம்
என்கிறாய்!
எது நாகரிகம்?
மரணத்தை
விதைப்பதா?
தடுப்பது/தள்ளிப்போடுவதில்லையா???!!!


பணம் ஒன்று தான்
பிரதானம் என்கிறாய்!
பெற்ற உற்றாரைவிட...

மனிதனின் அஞ்ஞானத்தை
போக்கி
ஞானத்தை தரும்
கல்வி என்கிறோம்!
ஆனால்
ஞானத்தை போக்கி
அஞ்ஞானத்தை அல்லவா
தருகின்றது – இன்றைய கல்வி


 மனிதன் பணம் சம்பாரிக்கும்
இயந்திரமாக மாறிவிட்டான்...

கடமையை செய்து
வாழ்க்கையை அனுபவித்து
வாழும்
மனிதர்களை காண்பது
இப்பொழுது
கடவுளை காண்பது போலாகிற்று...

மனிதன்.!

மனிதன் பின்னால்..
மனிதனை பின்தொடர்ந்து...
அலைகின்றான்..
தொலைக்கின்றான்...
வாழ்க்கையை.

பணம் சேமிப்பதாக நினைத்து கொண்டு
நம் சமுதாயத்தை
நாமே அழிக்கின்றோம்.
கல்வி என்கிற பேரில்!!!!!

No comments:

Post a Comment