கல்விமுறையில்
மாற்றம் வேண்டும்
( இன்றைய
கல்விமுறையில் )
இன்றைய
கல்விக்கூடங்கள்
பணம் ஈட்டூம்
அலுவலகங்களாக மாறிவிட்டது...
கல்வி என்பதே
அரிதாகி விட்டது...
நல்ல – அறியுள்ள
ஞானத்தையும் அறிவையும்
வளர்க்கும் கல்வியே
கரைந்து போய்விட்டது...
மாணவர்களை
பணம் ஈட்டூம்
இயந்திரமாக்க
முயலுகின்றன
கல்விநிலையங்கள்...
தாய்மொழியையும் ,
தன் வரலாறையும் ,
புவிக்கோளத்தின் வரலாறையும்,
அவனிடம் மறைத்து விட்டு,,
ஆடம்பர
மாயையான
போலிகளை
உண்மை என்று
கற்பிக்க படுகிறது...
கல்விமுறையில்-இன்றைய
கல்விமுறையில்
மாற்றம் வேண்டும்...
மாற்றம் ஒன்றுதான்
மாறாதது !
பிள்ளைகளின் மனதில்
திணிக்காதீர்கள்-கல்வியை...
பிள்ளைகளே
அருந்தி அனுபவிக்கிற
கல்விமுறையை
கொண்டுவாருங்கள்...
புதிய
அறியுசார்
மாணவர்களை ,
மக்களை ,
சமுதாயத்தை
உருவாக்குவோம்...
ஜெய்ஹிந்த்……………….
No comments:
Post a Comment