Saturday, September 22, 2012


மன்மோகன்சிங் – அரசாட்சி
( பாமரனின் குமுறல் )



எல்லாவற்றிலும்
அந்நியத்தை
புகுத்திவிட்டாய்
பின்
ஏன்
இன்னும்
எங்கள்
சுவாசத்தை
மட்டும்
விட்டு
விட்டாய்....


ஒரு காலத்தில்
சலுகைகள்
வந்து
சேரவில்லை
என்று போராடினோம்
ஆனால்
இன்றோ
அடிப்படை
உரிமைகளுக்காகவே
போராட வேண்டியதுள்ளது...


தன் அரசாட்சி
நிலைக்க
தரணியையே
விலைபேச
விட்ட
வியாபாரி...


பதவி – ஆசை
என்கிற பேரில்
மக்களை
கொல்லும்
இயந்திரங்கள்...


மிருகங்கள்
என்று
சொல்லக்கூடாது
அவைகள்
நன்றிக்கு
பாத்திரமானவைகள்...


ஓட்டை
வாங்குவான்
உரிமையை
கேட்க
வைப்பான்
வேலையை
செய்ய
கடமையை
செய்ய
கைக்கூலி
கேட்கின்றான்...


மக்களின்
தேவையை
பூர்த்தி செய்ய
நியமிக்கப்பட்டவர்கள்..


மக்கள்
அவர்கள்
தேவைகளை
பூர்த்தியாக்க
ஆளாகிவிட்டனர்...


இன்றைய
நிலைமையோ
தலைகீழாக உள்ளது...


ஆட்சியில்
அமர்ந்து
மக்களுக்கு சேவை
செய்யச்சொன்னால்...


மக்கள்
இவர்கள் ஆட்சிக்கும்
அவர்கள் கை கூலிகளுக்கும்
ஓட்டளிப்பு மூலம்
சேவை செய்ய வேண்டியுள்ளது!!!!

No comments:

Post a Comment