உங்களை அலங்கரிக்கின்றோம் எங்கள் மரணத்தால்
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
பட்டு சரிகையாகின்றோம்
நான்தான் – பட்டாம்பூச்சி............
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய செல்களாக அவதரிக்கின்றோம்
நான்தான் – உடற்செல்கள் ( மனித உடல் வளர்ச்சி )..............
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய தேகத்தை தருகின்றோம்
நான்தான் – குழந்தை இளமைப்பருவம்..........
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய சிந்தனை – ஞானத்தை
தருகின்றோம்
நான்தான் – மடமை ( அஞீஞானம் )...........
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய ஜீவனை (கருத்தரிப்பை) கொடுக்கின்றோம்
நான்தான் – பின்னடையும் விந்தனு (கருத்தரிக்காத விந்து).........
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
காயாகி கனியாகின்றோம்
நான்தான் – காய்கனிகளின் விதை...........
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
ஆடம்பர பொருளாகின்றோம்
நான்தான் – மிருகங்களின் தோல்..........
எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
உடலாகின்றோம்
நான்தான் – மிருக இறைச்சி................
தினம் தினம்
எத்தனையோ
மரணங்கள்
எண்ணிலடங்கா
மரணங்கள்தான்
நம்மை
அலங்கரிக்கின்றான.......................

No comments:
Post a Comment