Saturday, September 22, 2012

தாய்மை




கருவினை ஈன்றெடுத்து
உன் தாய்மையை
காட்டிவிட்டாய்...

என் மௌனத்தை
கலைத்து விட்டாய்......

இருவரின் – நம்
இருவரின்
நிர்வாணத்தை
இச் சிசுபாலன்
தன் பிறப்பின் மூலம்
மறைத்துவிட்டான்....

உன் பரிசம்
என்னை கிறங்கடிக்கிறது....

ஓறாயிரம் வார்த்தைகள்
சொல்லுது
நாம் இட்டு கொண்ட
முத்தங்கள்......


நம் அணைப்பு
ஓறாயிரம்
அர்த்தங்களை
நமக்கு உணர்த்தியது.....

நாம் கொண்ட ஊடல்
நம்மையே மறக்க செய்தது.....

குழந்தையின் – நம்
குழந்தையின்
அங்க அசைவுகளை கண்டு
நான் ஆச்சரியத்தில்
மூழ்கி திளைத்தேன்......

உன்னுடன் இருந்தது
ஒரே ஒரு வாரம்.
ஆனாலும்,
நான் ஓராண்டாய்
நினைத்து மகிழ்கின்றேன்
மனம் என்னும்
மனித குரங்கை
மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு!!!

No comments:

Post a Comment